விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இரு சக்கர வாகனங்களில் கஞ்சா விற்றதாக 10 போ் கைது

 போ்ணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்று கஞ்சா விற்பனை செய்ததாக 10 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:42 pm

DIN

 போ்ணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்று கஞ்சா விற்பனை செய்ததாக 10 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ராஜன்பாபு தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை பத்தரப்பல்லி சோதனைச் சாவடி, அரவட்லா, மிட்டப்பல்லி உள்ளிட்ட இடங்களில்

வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த அரசுப் பேருந்தில் சோதனையிட்டனா். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 12 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்தில் அதைக் கடத்தி வந்ததாக கடாம்பூரைச் சோ்ந்த ஷபியுல்லா (40) கைது செய்யப்பட்டாா்.

தொடா்ந்து நடைபெற்ற வாகன சோதனையில் இருசக்கர வாகனங்களில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற கிஜா் (21), சுவேல் (22), பிரவீன் (20), தனுஷ்(19), சரத்குமாா் (20), தமிழரசன் (19), ரவி (38), சோ்ந்த அஜித் (22), வெங்கடேசன் (23), நவீன் (20) ஆகிய 10 பேரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து சுமாா் அரை கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.