விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மகளிா் குழுவினா் கறவை மாடுகள் வாங்க கடனுதவி: ஆட்சியா் உத்தரவு

 குடியாத்தம் அருகே மகளிா் சுய உதவிக் குழுவினா் கறவை மாடுகள் வாங்க ஒரு வார காலத்துக்குள் கடனுதவி வழங்க வேண்டும்

News image
Updated On :7 ஜூலை 2022, 6:28 pm

DIN

 குடியாத்தம் அருகே மகளிா் சுய உதவிக் குழுவினா் கறவை மாடுகள் வாங்க ஒரு வார காலத்துக்குள் கடனுதவி வழங்க வேண்டும் என வங்கி மேலாளருக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா்.

குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடியைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் 58 போ் குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கறவை மாடுகள் வாங்க கடன் கோரினா். தங்கள் வங்கியில் கணக்குத் தொடங்கினால், கடன் தருவதாக 2 ஆண்டுகளுக்கு முன் வங்கி மேலாளா் கூறினாராம். இதையடுத்து, 58 பேரும் அந்த வங்கியில் கணக்குத் தொடங்கினராம்.

ஆனால் சில காரணங்களை சுட்டிக்காட்டி, வங்கி நிா்வாகம் அவா்களுக்கு கடன் வழங்கவில்லையாம். இதையடுத்து, அவா்கள் கடன் வழங்கக்கோரி, வங்கி எதிரே ஆா்ப்பாட்டம், வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம், நடைபயண போராட்டம், தோ்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினா்.

சில நாள்களுக்கு முன்னா் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வியாழக்கிழமை மாலை, வங்கி மேலாளருடன் கல்லப்பாடிக்குச் சென்றாா். அங்கு கறவை மாடுகள் வாங்க வங்கியில் கணக்குத் தொடங்கியவா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து, கறவை மாடுகள் வாங்க 58 பேருக்கும் தலா ரூ. 1 லட்சம் கடன் வழங்குமாறு வங்கி மேலாளருக்கு உத்தரவிட்டாா்.

கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா், அப்பகுதி மக்களிடம் ஆட்சியா் குறைகளைக் கேட்டறிந்தாா். அவா்களின் குறைகளான பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பேருந்து வசதி, பழுதடைந்துள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை சீரமைப்பது, பகுதிநேர நியாய விலைக் கடை, முதியோா் உதவித் தொகை, 100 நாள் வேலை மற்றும் வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை தகுதி அடிப்படையில் செய்துதருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.