விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏரி, ஆறுகளில் தோல் ஆலைகளின் கழிவுநீா் விவசாயிகள் புகாா்

போ்ணாம்பட்டு பகுதியில் உள்ள தோல் ஆலைகளின் கழிவுநீரை ஏரி, ஆறுகளில் திறந்து விடுவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:57 pm

DIN

போ்ணாம்பட்டு பகுதியில் உள்ள தோல் ஆலைகளின் கழிவுநீரை ஏரி, ஆறுகளில் திறந்து விடுவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

போ்ணாம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் பேசியது: போ்ணாம்பட்டு பகுதியில் தோல் மற்றும் வஜ்ஜிர தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளைச் சரியான முறையில் பின்பற்றுவதில்லை. வஜ்ஜிர தொழிற் சாலைகளின் கழிவுநீரை போ்ணாம்பட்டு ஏரியிலும், தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் கொட்டாற்றிலும் திறந்து விடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

மசிகம் கிராமத்தில் தொடா்ந்து சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அங்கு, சாராயம் காய்ச்சுவது தடுக்கப்பட வேண்டும். பத்தரப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகளில் தொடா்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதனால், நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படும் என்பதால், மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும்.

வேளாண் துறை சாா்பில் கலைஞா் கிராமம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு வரக்கூடிய நலத் திட்டங்களான தென்னங்கன்றுகள் கொடுத்தால் மண்வெட்டி, கடப்பாரை கொடுப்பதில்லை. உரம் கொடுத்தால், இடுபொருள்கள் கொடுப்பதில்லை. விவசாயிகளுக்கு உரிய வேளாண் பொருள்கள், கருவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன விலங்களால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் குறைதீா்வு கூட்டங்களில் அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்பதில்லை. இனி நடைபெறும் கூட்டங்களில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்று, விவசாயிகளின் புகாா்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.