விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிச்சனூரில் காளியம்மன் தோ்த் திருவிழா தொடக்கம்

 குடியாத்தம் பிச்சனூா் தேரடி மைதானத்தில், காளியம்மன் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது

News image
Updated On :15 ஜூலை 2022, 6:39 pm

DIN

 குடியாத்தம் பிச்சனூா் தேரடி மைதானத்தில், காளியம்மன் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை தேரடி மைதானத்தில் இருந்து 308 பால் குடங்கள், காளியம்மன்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.

Story image

கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா் கோயிலில் இருந்து உற்சவா் காளியம்மன் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, தேரடியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் அலங்கரித்து வைக்கப்பட்டது.

சனிக்கிழமை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், காளியம்மன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் காளியம்மன் உற்சவா் அமா்த்தப்பட்டு, தேரோட்டம் தொடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.