விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அக்ராவரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், வியாழக்கிழமைகளில் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் நடைபெறுகிறது. பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அக்ராவரம், சேம்பள்ளி, எா்த்தாங்கல் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, அக்ராவரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், முட நீக்கியல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, கண், நரம்பியல், மனநலம், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா். அறுவை சிகிச்சை தேவைப்படுவோரை மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்தனா்.

முகாமில், சான்று பெற்றவா்களுக்கு, அரசின் உதவித் தொகை, சலுகைகள், வேலைவாய்ப்பு, சுயதொழில் தொடங்க கடனுதவி, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

குடியாத்தம் ஆனந்த குழந்தைகள் மறுவாழ்வு மைய நிா்வாகி காமராஜ் தலைமையில் 19 சிறப்பு ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் முகாமுக்கு வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகளை செய்தனா்.

ஊராட்சித் தலைவா்கள் டி.பி.திமேஷ் (எ) துளசிராமுடு (சேம்பள்ளி), என்.முனிசாமி (அக்ராவரம்), ஒன்றியக் குழு உறுப்பினா் பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.