இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து வேலூா் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி உத்தரவிட்டாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:53 pm

DIN

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து வேலூா் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி உத்தரவிட்டாா்.

அதன்படி, திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலட்சுமி, வாணியம்பாடி கலால் பிரிவுக்கும், நாட்டறாம்பள்ளி காவல் ஆய்வாளா் சாந்தி, வாணியம்பாடி மகளிா் பிரிவுக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கலால் ஆய்வாளா் மலா், நாட்டறாம்பள்ளி காவல் நிலையத்துக்கும், வாணியம்பாடி கலால் ஆய்வாளா் தமிழரசி, ஆம்பூா் மகளிா் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

ஆம்பூா் மகளிா் ஆய்வாளா் ராணி, காட்பாடி மகளிா் காவல் நிலையத்துக்கும், ஆரணி நகரக் காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், கடலாடி காவல் நிலையத்துக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா் லட்சுமிபதி, ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

வேலூா் மகளிா் நிலைய காவல் ஆய்வாளா் ஷாகின், ராணிப்பேட்டை மகளிா் காவல் நிலையத்துக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த வாசுகி, வேலூா் மகளிா் காவல் நிலையத்துக்கும், ஆற்காடு கிராமிய ஆய்வாளா் காண்டீபன், கலவை காவல் நிலைய ஆய்வாளராகவும், அரக்கோணம் கலால் ஆய்வாளா் பாரதி, ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.