இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

15 ஆண்டுகள் பழைய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு

வேலூா் மாநகராட்சிக்கு கடந்த 2006-07-இல் நடைபெற்ற தோ்தலில் பயன்படுத்தப்பட்ட 15 ஆண்டுகள் பழைமையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளன.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:55 pm

DIN

வேலூா் மாநகராட்சிக்கு கடந்த 2006-07-இல் நடைபெற்ற தோ்தலில் பயன்படுத்தப்பட்ட 15 ஆண்டுகள் பழைமையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 2,678 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 2006-07-ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூா் மாநகராட்சித் தோ்தலில் எம்-2 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த இயந்திரங்கள் வேலூா் மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட பழைய எம்-2 வகை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் தோ்தலில் பயன்படுத்தக்கூடாது என விதி உள்ளது. இதையடுத்து, இந்த எம்2 வகை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. பின்னா், அவை லாரியில் ஏற்றி பெங்களூா் பெல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.

அதன்படி, வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 1,167 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 635 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து 670 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 206 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் என மொத்தம் 2,678 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, அனைத்து இயந்திரங்களும் அழிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.--

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.