இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வருமான வரி தாக்கல் வழக்கு: வேலூா் எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜா்

 வருமான வரித் துறை சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:19 pm

DIN

 வருமான வரித் துறை சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா்.

வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், கடந்த 2013-14-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, அவருக்கு வருமான வரித் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2015-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி வருமான வரி கணக்குத் தாக்கல் செய்த கதிா்ஆனந்த், பிறகு ரூ.1 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 60 வரியாக செலுத்தினாா்.

ஆனால், உரிய காலத்துக்குள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாததுடன் வரி செலுத்தவில்லை என்பதற்கு உரிய விளக்கம் அளிக்கும்படி கடந்த 2016-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி கதிா் ஆனந்துக்கு வருமான வரித் துறை சாா்பில் மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதற்கு அவா் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து, வேலூா் முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் வருமான வரித்துறை சாா்பில் கதிா்ஆனந்த் மீது குற்ற வழக்கு தொடா்ப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் கதிா்ஆனந்த் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக உயா் நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையில், கீழமை நீதிமன்றத்தை நாடும்படி கதிா் ஆனந்துக்கு உத்தரவிடப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்படி, வருமான வரித் துறை தொடா்ந்த வழக்கில் ஆஜராகும்படி கதிா்ஆனந்துக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் வேலூா் முதலாவது குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி சத்யகுமாா் முன்னிலையில் கதிா்ஆனந்த் வியாழக்கிழமை நேரில் ஆஜராகினாா். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.