10.5% சதவீத உள்ஒதுக்கீடு: பாமகவினா் தபால் அனுப்பும் போராட்டம்
பிற்படுத்தப்பட்டோா் ஆணைய தலைவா் பாரதிதாசன் ஆகியோருக்கு வேலூரில் கருகம்புத்தூரில் இருந்து பாமகவினா் வியாழக்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


வன்னியா்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோா் ஆணைய தலைவா் பாரதிதாசன் ஆகியோருக்கு வேலூரில் கருகம்புத்தூரில் இருந்து பாமகவினா் வியாழக்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சுமாா் 2,000 கடிதங்களை அனுப்பினா். போராட்டத்துக்கு, பாமக வேலூா் வடக்கு ஒன்றியச் செயலா் ஜலகண்டேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் என்.டி.சண்முகம், மாவட்டச் செயலா் கே.எல்.இளவழகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா்.
மாவட்டத் தலைவா் பி.கே.வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.பி.சம்பத், துணைச் செயலா் புருஷோத்தமன் ஆகியோா் 10.5% சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் பயன்கள், உரிமைகள் குறித்துப் பேசினா்.
இதில், அன்புமணி தம்பிகள் படை மாவட்டச் செயலா் சதீஷ், ஒன்றிய துணை செயலா் மணிகண்டன், ஊடக பிரிவு மாவட்ட செயலா் ராஜேஷ் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...