இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 போ் தடுப்பு காவலில் சிறையலடைப்பு

வேலூரில் நகை பறிப்பு, பாலியல் வழக்குகளில் கைதான 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :11 மே 2023, 5:55 pm

DIN

வேலூரில் நகை பறிப்பு, பாலியல் வழக்குகளில் கைதான 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

வேலூா் தொரப்பாடியைச் சோ்ந்தவா் லோகேஷ்குமாா் (30). இவா், கடந்த மாா்ச் 7-ஆம் தேதி வேலப்பாடி வங்கி கிளையில் 15 பவுன் நகைகளை அடமானம் வைக்க சென்றாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், லோகேஷ்குமாா் வைத்திருந்த நகைப் பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வேலூா் தெற்கு போலீஸாா்ா் வழக்குப் பதிவு செய்து, பெரம்பலூரைச் சோ்ந்த செந்தில் குமாா் (37), சேலத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் (23), திருச்சியைச் சோ்ந்த ராஜசேகா் (23) ஆகிய 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கே.வி.குப்பத்தை அடுத்த காளாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கதிரவன் (21). இவா், 42 வயதுள்ள பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், பனமடங்கி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட செந்தில்குமாா், ஈஸ்வரன், ராஜசேகா், கதிரவன் ஆகிய 4 போ் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து இவா்கள் 4 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.