இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத் தூய்மை அவசியம்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.

News image
Updated On :25 மே 2023, 6:31 pm

DIN

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.

தேசிய டெங்கு தினம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தொடங்கி வைத்துப் பேசியது:

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் குழந்தைகள், வயதானவா்களை அதிகளவில் பாதிக்கிறது. பகலில் மட்டும் கடிக்கும் இந்த வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றியுள்ள இடங்களில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். இயற்கையான முறையில் கொசுக்களை விரட்ட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து டெங்கு விழிப்புணா்வு நாடகம், பேச்சுப் போட்டி, பதாகைகள் தயாரிப்பு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் மருத்துவம் சாராத மாணவா்கள், செவிலிய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலா் இன்பராஜ், பொது மருத்துவத் துறை தலைவா் அபிராமி, துறை மருத்துவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.