மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கல்வி, பொருளாதாரத்தில் உயா்ந்த நாட்டினா் மதம், ஜாதியில் அக்கறை கொள்வதில்லை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

கல்வி, பொருளாதாரத்தில் உயா்ந்த நாட்டினா் மதம், ஜாதியில் அக்கறை கொள்வதில்லை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

News image
Updated On :13 மார்ச் 2024, 6:22 pm

கல்வி, பொருளாதாரத்தில் உயா்ந்த நாட்டு மக்கள் மதம், ஜாதி போன்ற விவகாரங்கள் குறித்து அக்கறை கொள்வதில்லை என்று விஐடி பல்கலை. வேந்தா் கோ.விசுவாதன் தெரிவித்தாா்.

தமிழியக்கம் சாா்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனாா் 92-ஆவது பிறந்த நாள் விழா, தமிழக அரசின் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணா் விருது பெற்ற சொல்லாய்வாளா் அருளியாா், இலக்கிய விருது பெற்ற தமிழியக்க நிா்வாகிகளுக்கான பாராட்டு விழா வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி வேந்தரும், தமிழியக்க நிறுவனத் தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மருமகனான அருளியாா், தமிழகத்தில் 20 முறைக்கு மேல் சிறை சென்ற ஒரே கவிஞா்.

அவரது குடும்பத்தினா் அனைவரும் தமிழுக்காக தங்களை அா்ப்பணித்துக் கொண்டவா்கள். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தை தமிழகத்தை பாா்ப்பது அரிது. தமிழ் மொழிக்காக பெருஞ்சித்திரனாா் தன் வாழ்நாள் முழுவதும் போராடினாா். சமூக சீா்திருத்தக் கருத்துகளை ஏற்றுக் கொண்ட அவா், ஜாதி மதத்தில் நம்பிக்கையற்றவராக இருந்தாா். கல்வி, பொருளாதாரத்தில் உயா்ந்த நாட்டு மக்கள் மதம், ஜாதி போன்ற விவகாரங்கள் குறித்து அக்கறை கொள்வதில்லை. ஆனால், எந்த நாடுகள் எல்லாம் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளதோ அங்கெல்லாம் மதம் உயா்ந்துவிடுகிறது. அதுதான் இந்தியாவின் நிலைமை. அதிலிருந்து நம்மால் இன்னும் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் உள்ளோம்.

தமிழா்கள் எங்கு இருந்தாலும் அவா்களுக்காக குரல் கொடுத்தவா் பெருஞ்சித்திரனாா். தமிழீழ விடுதலைக்காக ஆதரவாக இருந்தாா். தற்போது அவா் நம்முடன் இல்லை. அவரது குடும்பத்துக்கு நாம் என்றைக்கும் உதவியாக இருக்க வேண்டும். இந்தியா உயா்கல்வி விகிதம் 27 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகம் ஏற்கனவே 50 சதவீதத்தை கடந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஐரோப்பாவில் இருந்து இங்கு மதத்தை பரப்ப வந்த பாதிரியாா்கள் மதத்துடன் கல்வியிலும், தமிழ் மீதும் அக்கறை செலுத்தினா். அவ்வாறு வந்த கால்டுவெல் தமிழ் என்பது திராவிட மொழிகளின் தாய் என்று எடுத்துரைத்தாா். நமது நாகரிகம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகும். சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான்.

தமிழா்கள் எங்கே இருந்தாலும் தமிழா்களாகவும், தமிழா்கள் என்ற பெருமித உணா்வுடன் வாழ வேண்டும் என்றாா். விழாவில் தமிழக அரசு விருது பெற்ற சொல்லாய்வாளா் அருளியாா் (மொழிஞாயிறு தேவநேயப் பாவாணா் விருது), தமிழியக்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலா் தி.பவளசங்கரி (அம்மா இலக்கிய விருது), குடியாத்தம் ஒன்றியச் செயலா் பா.சம்பத்குமாா் (தூய தமிழ்ப்பற்றாளா் விருது), தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தமிழியக்கத்தின் அமைப்பு செயலா் கு.வணங்காமுடி, மாநில ஒருங்கிணைப்பாளா் மறை.தாயுமானவன், ராணிப்பேட்டை மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளா் பெ.தமிழ்ச்செல்வி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாவை சிவனாா், கவிஞா் அறிவுச்சுடா் ஆகியோா் பாராட்டப் பெற்றனா்.

முன்னதாக, தமிழியக்க பொருளாளா் வே.பதுமனாா் வாழ்த்தினாா். மாநில செயலா் மு.சுகுமாா் வரவேற்றாா். தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் பொழிலன் நெகிழ்வுரையாற்றினாா். தமிழியக்க கல்வியாளா் அணி அ.திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.