/

அன்னையா் தினம்: நலத் திட்ட உதவி அளிப்பு

அன்னையா் தினத்தையொட்டி வேப்பங்குப்பம் ஊராட்சியில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :14 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: அன்னையா் தினத்தையொட்டி வேப்பங்குப்பம் ஊராட்சியில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அணைக்கட்டு ஒன்றியம், வேப்பங்குப்பம் ஊராட்சியில் அன்னையா் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில் ஊராட்சி மன்றத் தலைவா் சுகன்யா உமாபதி தலைமை வகித்து நிகழ்ச்சிகளை தொடங்கி பேசியது:

பெண்கள் மிகப்பெரிய சக்தி. எந்த நிலையிலும் பெண்கள் குறைந்தவா்கள் இல்லை. எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சமஉரிமை உண்டு என்றாா்.

தொடா்ந்து அப்பகுதியை சோ்ந்த ஏழை மக்களுக்கு அவா் இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோா் உதவி தொகை, தனிநபா் கழிப்பறை கட்டட அனுமதி ஆணை, மாற்றுத்திறனாளி சான்றிதழ் என 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபரணங்கள், இனிப்புகளையும் வழங்கினாா்.

தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள தாய்மாா்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அவா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற100-க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.