தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கஞ்சா போதையில் மனைவியிடம் தகராறு செய்தவா் கைது

வேலூா் அருகே கஞ்சா போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:56 pm

Din

வேலூா் அருகே கஞ்சா போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரை அடுத்த அரியூா், நம்பிராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (29). இவா் வேலூா் அணைக்கட்டு சாலையில் பங்க்கடை நடத்தி வருகிறாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

சுப்பிரமணி அடிக்கடி கஞ்சா புகைத்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தாா். இதுகுறித்து சுப்பிரமணியின் மனைவி அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சுப்பிரமணியின் கடையில் சோதனை செய்தபோது 10 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டாா். இதையடுத்து சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.