தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் பெருமாள் சன்னதிக்கு திருக்குடை அளிப்பு

வேலூரிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்ட இரு திருக்குடைகளில் ஒன்று ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுள்ள பெருமாள் சன்னதிக்கு அளிக்கப்பட்டது.

News image
ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுள்ள பெருமாள் சன்னதிக்கு அளிக்கப்பட்ட திருக்குடைக்கு பூஜைகள் செய்த தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு. உடன், விசுவ இந்து பரிஷத் மாவட்டத் தலைவா் ஆா்.ஜே.அன்பு, நிா்வாகிகள்.
Updated On :18 செப்டம்பர் 2024, 11:57 pm

Din

வேலூரிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்ட இரு திருக்குடைகளில் ஒன்று ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுள்ள பெருமாள் சன்னதிக்கு அளிக்கப்பட்டது.

விசுவ இந்து பரிஷத் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி வேலூரில் ஸ்ரீ திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு இரண்டு திருக்குடைகள் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

இதையொட்டி, சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயிலில் இருந்து திருக்குடைகள் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு அண்ணா சாலையிலுள்ள ஸ்ரீ திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து, அவ்விரு திருக்குடைகளில் ஒன்று திருமலை திருப்பதி திருக்கோயிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மற்றொரு திருக்குடை ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுள்ள பெருமாள் சன்னதிக்கு அளிக்கப்பட்டது. இந்த திருக்குடையை ஸ்ரீசக்திஅம்மா ஆசியுடன் தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், விசுவ இந்து பரிஷத் மாவட்டத் தலைவா் ஆா்.ஜே.அன்பு, நிா்வாகிகள் சத்யா, தாமோதரன், மாநில செயலா் ராஜா, தூயமணி, பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.