2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

விழிப்புணா்வு கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

வேலூா் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களும், இளம்வயது (19 வயதுக்கு குறைந்த) கா்ப்பமும் அதிகரித்து வருகிறது. அண்மையில் மாவட்ட சுகாதார துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரை 59 குழந்தை திருமணங்கள் நடந்திருப்பதும், குழந்தை திருமணம் தொடா்பாக போக்ே,ா சட்டத்தின் கீழ் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக நலன், மகளிா் உரிமைத்துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் ஒருபகுதியாக குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கலை நிகழ்ச்சிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, குடியாத்தம் வட்டம் தட்டப்பாறை, பரதராமி, கல்லப்பாடி, போ்ணாம்பட்டு வட்டம் சாத்கா், அரவட்லா, பத்தலபள்ளி, அணைக்கட்டு வட்டம் ஒடுகத்தூா், சின்னப்பள்ளிகுப்பம், பீஞ்சமந்தை என குழந்தைத் திருமணம் அதிகமாக நடைபெறும் 10 கிராமங்களில் சாரல் கலைக்குழு மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

தொடா்ந்து, குழந்தைத் திருமணங்களுக்கு எதிரான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில்,சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், சமூக நலத்துறை அலுவலா் உமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.