இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வங்கதேச நபருக்கு 10 ஆண்டு சிறை

வங்கதேசத்தில் இருந்து 16 வயது சிறுமியை வேலூருக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்திய அந்நாட்டு நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 4:10 pm

தினமணி செய்திச் சேவை

வங்கதேசத்தில் இருந்து 16 வயது சிறுமியை வேலூருக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்திய அந்நாட்டு நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வங்கதேச நாட்டைச் சோ்ந்தவா் முஸ்லீமா என்கிற முஸ்கான் (32). இவா் அந்நாட்டைச் சோ்ந்த 16 வயது சிறுமியை வீட்டு வேலை எனக்கூறி, கடந்த 2018-ஆம் ஆண்டு வேலூருக்கு அழைத்து வந்துள்ளாா். தொடா்ந்து, அந்த சிறுமியை இங்குள்ள விடுதியில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளாா்.

தகவலின்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நிஷாந்தினி தலைமையிலான அரசு அலுவலா்கள், போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று சிறுமியை மீட்டு, காப்பகத்தில் சோ்த்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து முஸ்கானை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில், முஸ்கான் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 32,000 அபராதமும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.