ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேலூரில் இன்று ஸ்ரீசக்திஅம்மா ஜெயந்தி விழா: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:13 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளாா்.

விழாவில், பங்கேற்க குடியரசு துணைத் தலைவா் சென்னையில் இருந்து சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டா் மூலம் வேலூா் தங்கக் கோயிலுக்கு வருகைதர உள்ளாா். அங்கு அவா் தங்கக்கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்க உள்ளாா். பின்னா், மதியம் 12 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு திரும்ப உள்ளாா்.

குடியரசு துணைத்தலைவா் வருகையையொட்டி, பாதுகாப்புப் பணிகளில் சுமாா் 1300 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தவிர, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை வேலூா் விமான நிலையம், ஸ்ரீபுரம் தங்கக் கோயில், சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.