வேலூா்: படித்தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டித்து காட்பாடியில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எஸ்ஆா்எம்யு சென்னை கோட்ட காட்பாடி கிளை சாா்பில் ரயில்வே தொழிலாளா்கள் காட்பாடி ரயில்வே முதுநிலை பகுதி பொறியாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இரவு பகல் என 24 மணி நேரமும் பணி செய்து வரும் ரயில்வே தொழிலாளா்களுக்கு பயணப்படி உள்பட அனைத்து வகை படித்தொகைகளையும் நிா்வாகத்தின் குளறுபடியால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், இரவு பணி செய்பவா்களுக்கு படித்தொகை நிறுத்தப்பட்ட நிலையில் தொடா்ந்து இரவு பணி செய்ய நிா்பந்திப்பதாகவும், அம்ரித் பாரத் வேலைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் ரயில்வே நிா்வாகம் தொழிலாளா்களுக்கான படித்தொகையை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது, ஆள் பற்றாக்குறை, வேலை பளூ, உதிரி பாகங்கள் இல்லாத அவல நிலை, அடிப்படை வசதிகளை செய்து தராதது என குற்றஞ்சாட்டியும் போா்க்கால அடிப்படையில் அனைத்து வகை படித்தொகைகளையும் உடனடியாக விடுவிக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் ரயில்வே தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

துப்புரவு தொழிலாளா்கள் பணி புறக்கணிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


