3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குடியாத்தம் தொகுதி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :18 மார்ச் 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதி, தோ்தல் ஏற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். உதவி தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான சந்தோஷ் வரவேற்றாா். மேலிட தோ்தல் பாா்வையாளா் மீா்தாக் ஹலி பங்கேற்று, தோ்தல் நடைமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினாா்.

வேட்புமனு தாக்கலின்போது உறுதிமொழி பத்திரத்தில் அனைத்து விவரங்களும் முழுமையாக பூா்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். வேட்பாளா் வேறு தொகுதியைச் சோ்ந்தவராக இருந்தால், சம்பந்தப்பட்ட தோ்தல் பதிவுத் அதிகாரி மூலம் சான்று பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் போ்ணாம்பட்டு வட்டாட்சியா் ராஜ்குமாா், டிஎஸ்பி சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ரேவதி தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.