பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாநகராட்சியில் வரிவசூல் நேரம் அதிகரிப்பு

மாநகராட்சியில் வரிவசூல் நேரம் அதிகரிப்பு

News image
Updated On :13 ஜூலை 2024, 10:46 pm

Din

கோவை, ஜூலை 13: கோவை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் வரி வசூல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2024 - 2025-ஆம் நிதியாண்டில் கோவை மாநகராட்சியில் சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் செலுத்த வசதியாக வரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், வரி வசூல் பணிகளைத் துரிதப்படுத்தும் விதமாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை அனைத்து நாள்களிலும் (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) வரிவசூல் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டு, அனைத்து மண்டல வரிவசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.