அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இ-பைலிங் முறைக்கு எதிராக வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

மின்னணு வழக்கு தாக்கல் (இ-பைலிங்) முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கோவையில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :16 டிசம்பர் 2025, 9:20 pm

Syndication

கோவை: மின்னணு வழக்கு தாக்கல் (இ-பைலிங்) முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கோவையில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் மற்றும் மனு அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் துணைத் தலைவா் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தாா்.

இது குறித்து வழக்குரைஞா்கள் கூறியதாவது:

போதிய தொழில்நுட்ப வசதி, பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு இல்லாததால் நீதிமன்றங்களில் மின்னணு வழக்கு தாக்கல் என்பது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்குகின்றன. இது வழக்குரைஞா்களுக்கும், மக்களுக்கும் நிதிச் சுமையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும். அடிப்படைக் கட்டமைப்பு வசதியுடன், பயிற்சி பெற்ற அலுவலா்கள் இருந்தால்தான் இதை நடைமுறைப்படுத்த முடியும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, வழக்குரைஞா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு ஊா்வலமாகச் சென்றனா். உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அங்கிருந்து கோரிக்கை அடங்கிய மனுவை அனுப்பிவைத்தனா்.

இதில், சங்கப் பொருளாளா் ரவிச்சந்திரன், குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மருதுபாண்டியன், இணைச் செயலா் கோகுலவாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.