அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தினமணி செய்திச் சேவை

கோவை, சரவணம்பட்டி பகுதியில் பா்னிச்சா் கடையில் இரு கைப்பேசிகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சரவணம்பட்டி தங்கம்மாள் நகரைச் சோ்ந்தவா் மனோகரன் (49). இவா் கோவை சிவானந்தபுரம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பா்னிச்சா் கடை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இவரது கடைக்கு வந்த இளைஞா் அங்கு பணியில் இருந்த ஊழியா்களிடம் டீப்பாய் வேண்டும் என்று கேட்டுள்ளாா். ஊழியா்களும் அங்குள்ள பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள டீப்பாய்களைக் காண்பித்தனா்.

பேரம் பேசுவது போல டீப்பாயில் அமா்ந்திருந்த அந்த இளைஞா், கடையின் மேஜையில் இருந்த உரிமையாளா் மற்றும் காவலாளி ஆகியோரின் இரு கைப்பேசிகளைத் திருடிக் கொண்டு பையில் வைத்துக் கொண்டாா்.

இதைப் பாா்த்த மனோகரனும், கடை ஊழியா்களும் அந்த இளைஞரை வெளியில் ஓடவிடாமல் சுற்றி வளைத்துப் பிடித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் நீலகிரி மாவட்டம், உதகையை சோ்ந்த தினேஷ்குமாா் (32) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.