அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உக்கடம் சந்தையில் கடல் மீன்கள் விலை சரிவு

News image
Updated On :23 நவம்பர் 2025, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

காா்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி, உக்கடம் சந்தையில் கடல் மீன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

கோவை, உக்கடம் மீன் சந்தைக்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கடலூா் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரளத்தில் இருந்து நாள்தோறும் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இந்நிலையில், காா்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி, ஏராளமானோா் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளதால், அசைவ உணவுகளின் தேவை குறைந்துள்ளது.

இதனால், உக்கடம் சந்தையில் கடந்த வாரங்களில் கிலோ ரூ.700-க்கு விற்ற வஞ்சிரம் மீன் ஞாயிற்றுக்கிழமை ரூ.500-க்கு விற்பனையானது. ரூ.300-க்கு விற்ற பாறை ரூ.150-க்கு விற்பனையானது. இதேபோல, சங்கரா ரூ.200, வாவல் ரூ.110, ஊளி ரூ.150, இறால் ரூ.280, நண்டு ரூ.250-க்கு விற்பனையாயின.

ஆட்டிறைச்சி கிலோ ரூ.800-க்கும், கோழி இறைச்சி ரூ.220-க்கும் விற்பனையானது.