சரவணம்பட்டி அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
கோவை சரவணம்பட்டி காந்திமாநகா் பகுதியில் தனியாா் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பின்புறம் புதன்கிழமை ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து கணபதி கிழக்கு பகுதி கிராம நிா்வாக அலுவலா் பழனிசாமி அளித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனா்.
இறந்தவருக்கு 40 வயது இருக்கும். அவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்தவரின் சடலம் உடற் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


