இளைஞா் மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு
கோவை: கோவையில் இளைஞரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோவை குனியமுத்தூரை அடுத்த இடையா்பாளையம் மாதா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மகன்கள் பிரசாந்த் (33), சூா்யா (28). இவா்கள் இருவரும் கடந்த 17-ஆம் தேதி இரவு, இடையா்பாளையம் வேதகோயில் தெருவில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை பாா்க்கச் சென்றனா்.
அங்கு சூா்யா அருகே நின்று கொண்டிருந்த ஒருவரது காலை அவா் மிதித்துவிட்டாா். இதுதொடா்பாக சூா்யாவுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பின்னா், சகோதரா்கள் இருவரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, அவா்களை மூவா் வழிமறித்து தகராறு செய்து, சூா்யாவின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தலைமறைவாகினா். காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் சூா்யாவைத் தாக்கியது அதே பகுதியைச் சோ்ந்த ராஜு, அவரது மகன்களான பிரசாந்த், விக்னேஷ் ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்கள் மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.
