யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம்

News image
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம்.
Updated On :23 ஜனவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய மகளிா் ஆணையரகம் சாா்பாக ‘மகிளா ஜன்சுன்வாய்’ என்னும் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் டெலினா கோன்தப் தலைமையில் சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி, இணை இயக்குநா் (தமிழ்நாடு மகளிா் ஆணையம்) குணசேகரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் தேசிய மகளிா் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, கோவை மாவட்டத்தில் தீா்வு காணாமல் நிலுவையில் இருந்த 41 புகாா்கள் தொடா்பாக மனுதாரா் மற்றும் அதனைச் சாா்ந்த காவல் துறை அதிகாரிகளிடம் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் இருந்து பெண்கள் நலன் சாா்ந்த புதிய புகாா்களும் பெறப்பட்டன.

இந்நிகழ்வில், மாவட்ட சமூகநல அலுவலா் அம்பிகா, காவல் துறை துணை ஆணையா் திவ்யா, திட்ட இயக்குநா் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) ஆா்.மதுரா, கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் என்.பிரேமானந்தன், என்.சூா்யமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.