கோவை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை ஒட்டி அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சுமார் 3 ஆயிரம் காவலர்கள் வியாழக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாள்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக வணிகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இதனால், கோவை மாநகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சுமார் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதே போல், கோவை புறநகர் காவல் எல்லைக்கு உள்பட்ட சூலூர், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், தொழிற்சங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் காவல் துறையினரின் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆங்கூா் ராவுத்தா் பள்ளி பெயரில் 2 கல்வெட்டுகள்: பொதுமக்கள் அதிருப்தி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

கருணாநிதி பிறந்த தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


