சின்னத் தடாகத்தையடுத்த ஆனைகட்டியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது லாரி மோதியதில் 28 ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.
சூலூரைச் சேர்ந்தவர் ஜோதி. இவர், ஊர்ஊராகச் சென்று, தோட்டங்களில் பட்டி அமைத்து, தனது ஆடுகளை மேய்த்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில், ஆனைகட்டியில் மேய்ச்சலை முடித்துவிட்டு ஆடுகளுடன் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள தொலைபேசி நிலையம் அருகே, வளைவில் வேகமாக வந்த லாரி ஆடுகளின் மீது மோதியது. இதில், 28 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதையடுத்து, கவனக்குறைவாக லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கெளதமிடம் துடியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


