கோவையில் ரௌடி ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியதாக 4 இளைஞர்களை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் மீது திண்டுக்கல், நெல்லை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த ராக்கெட் ராஜாவை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை வ.உ.சி.பூங்கா, சிறைச்சாலை மதில் சுவர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து விசாரணை நடத்திய ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் கோவை, குறிச்சியைச் சேர்ந்த பி.யாசர் அராபத் (24), கோட்டை மேட்டைச் சேர்ந்த சதாம் உசேன் (20), சிவகங்கையைச் சேர்ந்த ஜெ.திருநாவுக்கரசு (23), பி.கே.புதூரைச் சேர்ந்த வி.நிமேஷ் (26) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின்னர், காவல் நிலையப் பிணையில் நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

