ரௌடிக்கு ஆதரவாக சுவரொட்டி: 4 பேர் கைது
கோவையில் ரௌடி ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியதாக 4 இளைஞர்களை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவையில் ரௌடி ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியதாக 4 இளைஞர்களை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் மீது திண்டுக்கல், நெல்லை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த ராக்கெட் ராஜாவை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை வ.உ.சி.பூங்கா, சிறைச்சாலை மதில் சுவர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து விசாரணை நடத்திய ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் கோவை, குறிச்சியைச் சேர்ந்த பி.யாசர் அராபத் (24), கோட்டை மேட்டைச் சேர்ந்த சதாம் உசேன் (20), சிவகங்கையைச் சேர்ந்த ஜெ.திருநாவுக்கரசு (23), பி.கே.புதூரைச் சேர்ந்த வி.நிமேஷ் (26) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின்னர், காவல் நிலையப் பிணையில் நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...