கோயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்த சூலூர் காவல் துறையினருக்கு கோவை காவல் கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை பாராட்டி வெகுமதி அளித்தார்.
சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கோயில்களில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவந்தன. இதில் எந்த ஒரு தடயமும் கிடைக்காததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டிருந்தது. அப்போது ஒரு கிராமத்தில் சில்லறை நாணயங்களை மாற்ற முயன்றது பற்றி தகவல் அறிந்த தனிப் பிரிவு காவலர் செந்தில், தனிப்படையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்து விரைந்து சென்று முக்கிய குற்றவாளியைப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் அனைத்து குற்றவாளிகளும் பிடிபட்டனர்.
இதில் தனிப்படையில் பணியாற்றிய கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர், சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ், உதவி ஆய்வாளர்கள் லெனின் அப்பாதுரை, அருண், ஜெகநாதன், காவலர்கள் மஹாராஜன், செல்லதுரை, தனிப் பிரிவு காவலர் செந்தில், காவலர் நண்பர்கள் படையை சேர்ந்த வெற்றி உள்ளிட்டோருக்கு கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பாராட்டுத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஜோசப் விஜய் நல்லாட்சியைத் தரவேண்டும்: கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து

விஐடி பி.டெக். ரேங்க் பட்டியல் வெளியானது! கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி?

சோமநாதர் கோயிலில் 75-வது ஆண்டு விழாவில் மோடி!

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே! பேரவைச் செயலரிடம் கடிதம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
