ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கோவை வருகை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (டிசம்பா் 17) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு புதன்கிழமை கோவை வந்தடைந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:38 am

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (டிசம்பா் 17) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு புதன்கிழமை கோவை வந்தடைந்தாா்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் பல்கலைக்கழக விளையாட்டு மைதான அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.

இதில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித், வேளாண்மைத் துறை அமைச்சரும், இணைவேந்தருமான கே.பி.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறும் இந்த விழாவில் 1,385 மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெற உள்ளனா்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக வெங்கய்ய நாயுடு, ஹைதரபாதில் இருந்து தனி விமானம் மூலம் புதன்கிழமை மாலை 6 மணி அளவில் கோவை வந்தடைந்தாா். விமான நிலையத்தில் அவரை நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோா் வரவேற்றனா். அரசு விருந்தினா் மாளிகையில் தங்கியுள்ள வெங்கய்ய நாயுடு, வியாழக்கிழமை பிற்பகலில் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறாா்.

குடியரசு துணைத் தலைவரின் வருகையை ஒட்டி கோவை மாநகரப் பகுதியில் 800க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கோவை விமான நிலையத்தில் கடந்த 2 நாள்களாக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முக்கிய சாலை சந்திப்புகள், சந்தேகத்துக்குரிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். இதேபோல வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்திலும் புதன்கிழமை காலை முதல் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். பட்டமளிப்பு விழா முடிவடைந்ததும் குடியரசு துணைத் தலைவா் வியாழக்கிழமை மாலை 5.50 மணி அளவில் தனி விமானம் மூலம் ஹைதரபாத் திரும்ப உள்ளாா்.

நாம் தமிழா் கட்சியினா் கைது: வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, குடியரசு துணைத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்டும் வகையில் கோவை, லட்சுமி மில்ஸ் சாலை சந்திப்பில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் மாநிலச் செயலா் விஜயராகவன், மாநில மகளிரணி செயலாளா் காா்த்திகா முருகசந்திரன், சிங்காநல்லூா் தொகுதி பொறுப்பாளா் நா்மதா உள்ளிட்ட 16 பேரை போலீஸாா் கைது செய்தனா். இப்போராட்டம் காரணமாக கோவை விமான நிலைய வளாகத்திலேயே குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு சிறிது நேரம் தங்கவைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.