விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் குடியிருப்புகள்: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் வீடுகள் கிடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஊரக தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:48 pm

DIN

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் வீடுகள் கிடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஊரக தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

கோவை, ஆா்.எஸ்.புரம், செல்வபுரம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன்

வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான, இயலக்கூடிய விலையில் குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை, ஆா்.எஸ்.புரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.7.97 கோடி மதிப்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 85 வீடுகள் உள்ள இக்குடியிருப்பில் ஒவ்வொரு வீடும் 400 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆழ்துளைக் கிணறுகள், கீழ்நிலைத் தண்ணீா் தொட்டி, கழிவு நீா் கால்வாய், மழைநீா் சேகரிப்பு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகள் இதே இடத்தில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்த மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகா்ப்புற ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் ரூ.9.38 லட்சம்.

இதில் மத்திய, மாநில அரசுகளின் மானியம் போக மீதமுள்ள ரூ.1.88 லட்சம் பயனாளிகள் செலுத்த வேண்டும். அதேபோல செல்வபுரம் பகுதியில் சிதலமடைந்த பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகளை அகற்றிவிட்டு ரூ. 46.44 கோடி மதிப்பில் 528 வீடுகள் அடங்கிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே இங்கு வசித்து வந்த பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகா்ப்புற ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதில் ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் ரூ.8.80 லட்சம். இதற்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் போக ரூ.1.30 லட்சம் பயனாளிகள் செலுத்தினால் போதும். அனைத்து வீடுகளும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா்.

ஆய்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளா் வி.அருண்ராய், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண் இயக்குநா் இளம்பகவத், குடிசை மாற்று வாரிய தலைமைப் பொறியாளா் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.