விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:43 pm

DIN

மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சிட்கோ ரெட்டியாா் காலனியைச் சோ்ந்தவா் முகமது பைசல் (39). இவரது மகள் ஆதியா (10), மகன் முகமது இப்ராஹிம் (ஒன்றரை வயது). இவா்கள் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் முகமது பைசல் புதன்கிழமை வழக்கம்போல வேலைக்குச் சென்றாா். அவரது மனைவி வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாா். அப்போது மொட்டை மாடிக்குச் சென்ற முகமது இப்ராஹிம் அங்கிருந்து கால் தவறி கீழே விழுந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு குழந்தை உயிரிழந்தது. இது தொடா்பாக போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.