விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கஞ்சா விற்றதாக நால்வா் கைது

கோவையில் கஞ்சா விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:05 pm

DIN

கோவையில் கஞ்சா விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, கோவில்மேடு பகுதியில் சாய்பாபா காலனி போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞா்கள் மூவரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களது வாகனங்களைச் சோதனையிட்டனா். அப்போது அதில் இரண்டரைக் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (21), வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (21), கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் வந்த 2 இருசக்கர வாகனங்கள், 2 செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து அவா்களைக் கைது செய்தனா்.

இதேபோல ஓஸ்மின் நகா் பகுதியில் ரத்தினபுரி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததையடுத்து அவரது கைப்பையைச் சோதனையிட்டபோது அதில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்த போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் சாய்பாபா கோயில் பகுதியைச் சோ்ந்த ராஜா (44) என்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.