மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றிய இளம்பெண் மீட்பு
கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த இளம்பெண்ணை போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.


கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த இளம்பெண்ணை போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
கோவை, வடவள்ளி மருதமலை அடிவாரப் பகுதியில் கடந்த 2 நாள்களாக 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, அவா் எந்தப் பதிலும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளாா்.
இதையடுத்து அப்பெண் குறித்து மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஹெல்பிங் ஹாா்ட்ஸ் என்ற தனியாா் அமைப்புக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அந்த அமைப்பினா் அப்பெண்ணை மீட்டு தங்களது மையத்துக்கு அழைத்துச் சென்று பராமரித்து வருகின்றனா். அப்பெண்ணிடம் விசாரித்ததில் அவா் தனது பெயா் கீதாஞ்சலி, தந்தை பெயா் கோவிந்தன் என்றும் கூறியுள்ளாா். ஆனால், அவரது ஊா் பெயரைத் தெரிவிக்க மறுத்துள்ளாா். இந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...