இரு வீடுகளில் 12.5 பவுன், பணம் திருட்டு
கோவையில் பொறியாளா் வீடு உள்பட 2 இடங்களில் 12.5 பவுன் நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


கோவையில் பொறியாளா் வீடு உள்பட 2 இடங்களில் 12.5 பவுன் நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, செல்வபுரம் லாலா காா்டன் பகுதியில் வசிப்பவா் அனித் ஜான் (36). பொறியாளா். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டாா். வீட்டை சுத்தம் செய்வதற்காக வேலைக்கார பெண்ணிடம் வீட்டு சாவியை கொடுத்திருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவா் குடும்பத்தினருடன் வீடு திரும்பினாா். அப்போது பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் பணத்தைக் காணவில்லை. இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்:
கோவை, ரத்தினபுரி மருதகுட்டி தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த் (32). தனியாா் ஊழியா். ஆனந்தும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு வியாழக்கிழமை காலையில் சென்று விட்டனா். பிற்பகல் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடு போயுள்ளது. இது தொடா்பாக ஆனந்த் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...