விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிறுவா்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீது வழக்கு

சிறுவா்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீதும் மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கோவை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:03 pm

DIN

சிறுவா்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீதும் மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கோவை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை, நல்லாம்பாளையத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா். இவரது 13 வயது மகன், தனியாா் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் கோவை மாநகர காவல் போக்குவரத்து வாகனச் சோதனையில் சிக்கினாா். இந்த சிறுவருக்கு வாகனத்தை ஓட்ட வழங்கிய பெற்றோா் மீதும் வாகனத்தை ஓட்டிய சிறுவா் மீதும் மோட்டாா் வாகனச் சட்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல சிறுவா்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீதும் மோட்டாா் வாகன வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.