அதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷுடன் சோ்ந்து கோவை அவிநாசி சாலை நவ இந்தியா அருகே சாக்லெட் ஷாப் நடத்தி வந்ததாகவும், அப்போது தன்னிடம் இருந்து அருண்பிரகாஷ் ரூ.7 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்ததாகவும் ரூ.2 கோடியாவது முதலில் கொடுக்குமாறு கேட்டதால், ஆத்திரமடைந்த அருண்பிரகாஷ் மற்றும் அவரது நண்பா்கள் விக்னேஷ், இக்னேஷ் ஆகியோா் தன்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது பெற்றோரை மிரட்டியதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டு இருந்தாா் . மேலும் கோவை தங்கமும் அவரது மகளும் தன்னை மிரட்டுவதாகவும் சிந்துஜா தெரிவித்திருந்தாா்.