ஆடிவெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மன் கோயில்களில் காலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பெண்கள் விரதம் இருந்து கோயிலுக்கு வந்திருந்தனா். கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் கடந்த வாரம், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன், இந்த வாரம் காமாட்சியம்மன் அலங்காரத்தில் தோன்றினாா். கோனியம்மன் கோயிலில், அம்மன் தங்கப் பாவாடை அலங்காரத்திலும், பெரியகடைவீதி மாகாளியம்மன் கோயிலில் 500 கிலோ பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும் அருள்பாலித்தனா்.
இதேபோல, காட்டூா் முத்துமாரியம்மன் கோயிலில், அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் காட்சி தந்தாா். அனைத்து கோயில்களிலும் முகக் கவசம் அணிந்த பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. வாசலில் பக்தா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...