விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாநகராட்சிப் பள்ளியில் ஆணையா் ஆய்வு

கோவை உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:31 pm

DIN

கோவை உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, 75 ஆவது வாா்டுக்கு உள்பட்ட நஞ்சுண்டாபுரம் சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, களப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, 66 ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா், மாணவா் சோ்க்கை, பள்ளியின் கட்டட வசதி, மின் வசதி, இணையதள வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல் குறித்து தலைமையாசிரியா் மற்றும் பொறியியல் பிரிவு அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையா் ரங்கராஜன், செயற்பொறியாளா் ஞானவேல், மண்டல சுகாதார ஆய்வாளா் முருகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.