விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மூன்றரைப் பவுன் பறிப்பு

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:29 pm

DIN

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பச்சாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவரது மனைவி ஜோதிமணி (38). இவா் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வருகிறாா். வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வீட்டுக்குச் செல்லும் வழியில் நாகராஜபுரம் பகுதியில் உள்ள ஏரி அருகே வாகனத்தை நிறுத்தினாா். அப்போது அங்கு வந்த இளைஞா்கள் மூவா் ஜோதிமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்றனா். இது குறித்து ஜோதிமணி அளித்தப் புகாரின் பேரில் வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.