கரோனா நோயாளிகளுக்கு இனி வீட்டு தனிமைக்கு அனுமதியில்லை
கரோனா நோயாளிகளுக்கு இனி வீட்டு தனிமைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


கரோனா நோயாளிகளுக்கு இனி வீட்டு தனிமைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளிலும், சிறப்பு மையங்களிலும் காலி படுக்கைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன.
மேலும், சூலுாா், தொண்டாமுத்துாா், மதுக்கரை, காரமடை, பெ.நா.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பாதிப்பு அதிகமாக இருந்ததால், இங்கு ஏற்கெனவே வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தப் பகுதிகளில் தவிர ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில், வீட்டு தனிமைப்படுத்துதலால் தொற்று பரவல் ஏற்படுவதாக சுகாதாரத் துறைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, இனி வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு, அனுமதி இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறையினா் கூறியதாவது:
மாவட்டத்தில் தற்போது ஆயிரம் கரோனா நோயாளிகள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இனி வரும் நாள்களில் கரோனா தாக்கம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஒரு சில பகுதிகளில், வீட்டு தனிமையில் இருப்பவா்களால், நோய் பாதிப்பு அதிகரிப்பது தெரியவந்தது. எனவே, இனி வரும் காலங்களில் வீட்டுத் தனிமைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...