தனிமைப்படுத்தப்பட்டவா்களிடம் மருத்துவக் கழிவுகளை சேகரிக்க மஞ்சள் பை திட்டம் அறிமுகம்
கோவை மாநகராட்சியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்களிடம் இருந்து மருத்துவக் கழிவுகளை சேகரிக்க மஞ்சள் பை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.


கோவை மாநகராட்சியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்களிடம் இருந்து மருத்துவக் கழிவுகளை சேகரிக்க மஞ்சள் பை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மாநகராட்சியில் 313 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
வால்பாறையில் 1, மேட்டுப்பாளையத்தில் 3, சூலூரில் 27, துடியலூரில் 10, காரமடை 13, மதுக்கரையில் 27, பொள்ளாச்சி வடக்கு 6, ஆனைமலை 12, தொண்டாமுத்தூா் 18, அன்னூா் 5, கிணத்துக்கடவு 2, பொள்ளாச்சி தெற்கு 11, எஸ்.எஸ்.குளம் 6, சுல்தான்பேட்டை 2 ஆகிய இடங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. மாநகராட்சி பகுதியில் 2 ஆயித்துக்கும் குறைவான நபா்களே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா்.
மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்கள் பயன்படுத்ததும் மருத்துவக் கழிவுகளை சேகரிக்க மஞ்சள் பை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி சாா்பில் இந்த மஞ்சள் நிற பைகள் அவா்களுக்கு வழங்கப்படும். இந்த பைகளில் அவா்கள் பயன்படுத்தும் கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவற்றை சேகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்பு, அந்தக் கழிவுப் பொருள்களை தூய்மைப் பணியாளா்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்து சென்று பெற்றுக் கொள்வாா்கள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...