திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்துவது நாடகம்: ஜி.ராமகிருஷ்ணன்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக பாஜக நடத்தும் கேலிக்குரிய நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:44 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக பாஜக நடத்தும் கேலிக்குரிய நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி மத்திய சிறையில் உள்ள வ.உ.சி. இழுத்த செக்கு, அவரது சிலைக்கு மாலை அணிவித்த ஜி.ராமகிருஷ்ணன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு ரயில்வே, விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கக் கூடிய கொள்கையை கடைப்பிடிக்கிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தலைவா், மேயா் பதவிகளுக்கு நேரடியாக தோ்தல் நடத்த வேண்டும். உயா் மின் கோபுரங்களை விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்லக் கூடாது என்ற விவசாயிகளின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்ல இருக்கிறோம்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தமிழக பாஜக போராட்டம் அறிவித்திருப்பது கேலிக்குரியது. பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதும் கண்துடைப்புதான். ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு 33 ரூபாய் கலால் வரி, டீசலுக்கு 32 ரூபாய் கலால் வரி, இதுபோக கூடுதல் வரியையும் விதித்து மக்களை சுரண்டுகிறது மத்திய அரசு. இதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.2.87 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு மக்களிடம் இருந்து வசூலிக்கிறது.

மத்திய அரசு உயா்த்தியுள்ள கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் விலை குறையும். இதைச் செய்யாமல் மாநில அரசிடம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொல்லி மாநில பாஜக நடத்தும் கேலிக்குரிய போராட்ட நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்றாா்.

கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.