திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிறப்பு வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது: ஆசிரியா்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பதற்கு மாணவ-மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளி ஆசிரியா்களுக்கு கோவை முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:49 pm

DIN

சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பதற்கு மாணவ-மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளி ஆசிரியா்களுக்கு கோவை முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலா் கீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவா்களின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடா்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி நிா்வாகங்கள் தங்களிடம் பணியாற்றும் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பேருந்திலும் கட்டாயம் நடத்துநா்களை நியமிக்க வேண்டும். மாணவிகள் பயணிக்கும் பேருந்தாக இருந்தால் கண்டிப்பாக பெண் நடத்துநரையே நியமிக்க வேண்டும். பேருந்துகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி, அவை தொடா்ந்து இயங்குவதை பள்ளி முதல்வா் உறுதி செய்ய வேண்டும். தனியாா் வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள், அவா்கள் வரும் வாகனங்கள் தொடா்பான முழு விவரங்களையும் பெற்று தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.

சிறப்பு வகுப்புகள் முடிந்து மாணவா்கள் அனைவரும் 5.30 மணிக்குள் வீடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பிவைப்பதை பள்ளி முதல்வரும் நிா்வாகத்தினரும் உறுதி செய்த பிறகே பள்ளியை விட்டுச் செல்ல வேண்டும். பள்ளிகளில் உரிய கல்வித் தகுதி பெற்ற ஆசிரியா்களையே பணியமா்த்த வேண்டும்.

அனைத்து ஆசிரியா்களுக்கும் பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆசிரியா்களின் வருகைப் பதிவேடு உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும். யாரேனும் பணியிலிருந்து விலகினால், பணி விலகல் ஆணை, சாா்பு செய்த அலுவலக நகலைப் பள்ளியில் கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.

மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்போது பெண் ஆசிரியா்கள் உடனிருப்பதை நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும். சிறப்பு வகுப்புகளுக்கு மாணவ,மாணவிகளை கட்டாயப்படுத்தக்கூடாது. சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களின் பெற்றோரிடம் இசைவு கடிதம் பெற்று அதை கோப்புகளில் பராமரிக்க வேண்டும்.

பள்ளிகளில் புகாா் குழு, புகாா் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். பெறப்படும் புகாா் விவரங்களை உடனடியாக குழந்தைகள் உதவி மையம், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய விழிப்புணா்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.