கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புலவர் செந்தலை ந.கௌதமன் மனைவி உலகநாயகி காலமானார்

சூலூர் பாவேந்தர் பேரவைப் புலவர் செந்தலை ந.கௌதமன் மனைவியும், பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியருமான சூ.அர.உலகநாயகி புதன்கிழமை இரவு காலமானார்.

News image
சூ.அர.உலகநாயகி
Updated On :24 ஆகஸ்ட் 2023, 4:48 am

DIN

சூலூர்: சூலூர் பாவேந்தர் பேரவைப் புலவர் செந்தலை ந.கௌதமன் மனைவியும், பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியருமான சூ.அர.உலகநாயகி புதன்கிழமை இரவு 11.45 மணிக்கு காலமானார்.

தமிழுணர்வு காரணமாக செகதாம்பாள் என்ற தனது இயற்பெயரை உலகநாயகி(வயது 62) என்று சட்டப்படி மாற்றிக் கொண்டார்.

உடல்நலக் குறைவால் உயிரிழந்த உலகநாயகியின் இறுதி ஊர்வலம், சூலூர் எஸ்.வி.எல்.நகர் 'தாயகம் ' இல்லத்திலிருந்து வியாழன் பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு, சூலூர் சமத்துவவனம் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலி நீக்கிய சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட ந.கவுதமன் - உலகநாயகி தம்பதிக்கு மகள் தாய்மொழி, மருமகன் மரு.கு.இளந்தமிழன், பெயர்த்தி தா.இ.அவனிஇளமொழி ஆகியோர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.