விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது: குடியரசு தின விழாவில்சத்குரு ஜக்கி வாசுதேவ் பேச்சு

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது என்று ஈஷாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினாா்.

News image

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றுகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது என்று ஈஷாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினாா்.

கோவை ஈஷா யோக மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்த சத்குரு ஜக்கி வாசுதேவ், பின்னா் அங்கு கூடியிருந்த பொதுமக்கள், ஆசிரமவாசிகளிடையே பேசியதாவது: பாரத தேசத்தில் வாழும் நாம் ஜாதி, மதம், மொழி, இனம், உணவு பழக்கம், கலாசாரம் என பல விதங்களில் வேறுபட்டு இருக்கிறோம். நம்மிடம் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் இருக்கும் இந்த பன்முகத்தன்மையையும், வேறுபாடுகளையும் பயன்படுத்தி நமக்குள் பிரிவினையை உருவாக்கும் செயல்கள் கடந்த 600 முதல் 700 ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக நடந்துள்ளன.

300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக அளவில் பொருளாதாரத்தில் வளமான தேசமாக நம் பாரத தேசம் இருந்தது.

அந்த நிலையை மீண்டும் அடையும் முயற்சியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம். பொருளாதார பலம் இல்லாமல் கலாசாரம், ஆன்மிக விழுமியங்கள் என நாட்டில் உள்ள எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது. மேலும், நம்மிடம் இருக்கும் பல விதமான வேறுபாடுகளைக் கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிந்து அதை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றாா்.

குடியரசு தின விழாவில் ஈஷா சம்ஸ்கிரிதி, ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவா்கள் தேசபக்தி பாடல்களை பாடினா். ஈஷாவின் முக்கிய நுழைவு வாயிலான மலைவாசலில் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சித் தலைவா் சதானந்தம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் பழங்குடியினா் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.