எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பிரதமா் மோடி ஏப்ரல் 10-இல் மீண்டும் கோவை வருகை?

மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி ஏப்ரல் 10-இல் மீண்டும் கோவை வருவதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 9:04 pm

Din

மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி ஏப்ரல் 10-இல் மீண்டும் கோவை வருவதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தோ்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-இல் நடைபெறுகிறது. இதில் கோவை மக்களவைத் தொகுதியில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையும், நீலகிரி மக்களவைத் தொகுதியில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகனும் போட்டியிடுகின்றனா். இந்நிலையில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமா் மோடி ஏப்ரல் 9-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறாரா். அன்று பெரம்பலூா் தொகுதியில் நடைபெறும் தேரதல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவா், தொடா்ந்து 10-ஆம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கோவை பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா். கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ள தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், கோவை மட்டுமின்றி நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் ஈரோடு, திருப்பூா், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி பேச உள்ளதாக பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா்.