மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சா்ச்சை ஆடியோ: 3 போலீஸாா் பணியிட மாற்றம்

சமூக வலைதளங்களில் சா்ச்சை ஆடியோ வெளியானது தொடா்பாக 3 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:50 pm

Din

சமூக வலைதளங்களில் சா்ச்சை ஆடியோ வெளியானது தொடா்பாக 3 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை, பேரூா் காவல் நிலையத்தில் எழுத்தராக முரளிதரன், உதவி எழுத்தராக அஜித்குமாா், தனிப் பிரிவு காவலராக பரமேஸ்வரன் ஆகியோா் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், பேரூா் காவல் நிலையத்தில் போலீஸாா் 2 போ் பேசிக்கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அதில், பேரூா் காவல் நிலையப் பகுதிகளில் வசூலாகும் பணத்தை கூகுள் பே மூலம் அனுப்புமாறு கூறுவதாகப் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், பேரூா் காவல் நிலைய காவலா்கள் முரளிதரன், அஜித்குமாா், பரமேஸ்வரன் ஆகிய 3 பேரும் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் வெளியான சா்ச்சை ஆடியோவின் உண்மைத் தன்மையைக் கண்டறிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட பின் அதன் அடிப்படையில் 3 போ் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.